| முப்பொழுதும் உன் கற்பனைகள் |
|
தமிழ் சினிமாவில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஒரு வித சைக்கோத்தன காதல் கான்சப்ட்டை மையமாக வைத்துகொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் எல்ரெட் குமார். |
கான்சப்ட் பழசாக இருந்தாலும், படம் எடுத்திருக்கும் விதத்தில் ஏதாவது புதுசாகவும், தரமாகவும் செய்ய வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார். அந்த முயற்சிக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது.
சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் அதர்வா, வேலை காரணமாக பெங்களூருக்கு செல்கிறார். அவருடைய சக ஊழியரான அமலா பாலின் நட்பு கிடைக்கிறது. இதற்கிடையில் அதர்வாவின் ஒரே ஆதரவாக கிராமத்தில் இருக்கும் அவருடைய அம்மா மரணமடைகிறார். இதனால் மனம் உடைந்துப்போகும் அதர்வாவுக்கு அமலா பாலின் நட்பு ஆருதலாக இருக்கிறது. பிறகு அமலா பாலிடம் அதர்வாவுக்கு இருக்கும் நட்பு காதலாக மாறுகிறது.
இந்த நிலையில் அமலா பால் அமெரிக்கா சென்று விடுகிறார். அமலா பாலை யாரோ கடத்திச் சென்றுவிட்டனர் என்று தவறுதலாக புரிந்துகொள்ளும் அதர்வா, அவர் நினைவாக இருக்க, திடீர் என்று அமலா பால் திரும்பி வருகிறார். வாரத்தில் ஐந்து நாட்கள் சென்னையிலும், இரண்டு நாட்கள் பெங்களூரில் அமலா பாலுடனும் என்று தனது காலத்தை ஓட்டுகிறார் அதர்வா. இதற்கிடையில் அதர்வா சென்னையில் பணிபுரியும் நிறுவனத்தின் மேலதிகாரியாக அமலா பால் வருகிறார்.
அமலா பாலை பார்த்தும் எந்த வித உணர்வை வெளிப்படுத்திகொள்ளாத அதர்வா, பெங்களூரில் உள்ள ஒரு பெண்ணை காதலிப்பதகாவும், வாரத்தில் இரண்டு நாட்கள் அங்குதான் இருப்பார் என்ற விஷயத்தையும் அறிந்துகொள்கிறார் அமலா பால். பெங்களூரில் அதர்வாவுடன் இருந்த பெண் தான் தான். அப்படியிருக்க தனது பெயரில் அங்கு அதர்வாவுடன் இருப்பது யார்? என்பதை அறிந்துகொள்ள அதர்வாவுக்கு தெரியாமல் அவருடைய பெங்களூர் வீட்டில் பதுங்கியிருக்கும் அமலா பால், அங்கு பார்க்கும் காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
அப்படி அவர் என்ன பார்த்தார்? அமலா பாலை காதலிக்கும் அதர்வா, அவரை தனது அலுவலகத்தில் பார்த்தும் கூட எந்தவிதமான உணர்வையும் ஏன் வெளிப்படுத்தி கொள்ளவில்லை. அவர் எதற்காக கொலை செய்கிறார் போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதுதான் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்'.
சில படங்களின் கதைக்கும், அதன் தலைப்புக்கும் சம்மந்தமே இருக்காது. அந்த வகையில் இந்த படத்தை பொறுத்தவரையில் தலைப்புக்கு ஏற்றவாறு திரைக்கதை மிகப்பொருத்தமாக இருக்கிறது. ஏற்கனவே இதுபோன்ற கருவை சுமந்துகொண்டு தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளிவந்திருக்கிறது என்றாலும், சில காட்சிகளின் மூலம் படத்தை கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அடுத்த நொடியிலேயே படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்கள் சுலபமாக யூகிக்கவும் முடிகிறது.
பானா காத்தாடியில் பார்த்த பள்ளி பருவ அதர்வாவை இந்த படத்திலும் சில இடங்களில் பார்க்க முடிகிறது. பாடல் காட்சிகள், சண்டைகாட்சிகள், காதல் காட்சிகள், செண்டிமென்ட் காட்சிகள் என அனைத்திலும் பாஸ் மார்க் வாங்கும் அதர்வா, வசனம் உச்சரிப்பதில் மட்டும் ஏன் தான் வட இந்தியர் போல் பேசுகிறாரோ.
அமலா பாலை சுற்றி கதை நடப்பதாக இருந்தாலும் அவருக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை. அதர்வாவுடன் காதல் செய்யும் காட்சிகள்தான் அதிகம். அதை நன்றாகவே செய்திருக்கிறார்.
சந்தானத்தின் வரும் சில காட்சிகளில் நம்மை சிரிக்க வைக்கிறது. ஜெயப்பிரகாஷ்க்கு டைலர் மேட் ரோல் என்று சொல்லலாம். அதர்வாவின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை சில காட்சிகளில் வந்தாலும் பாராட்டு பெறும் அளவுக்கு தனது பணியை செய்திருக்கிறார். சிறு வயது அதர்வாவாக நடித்திருக்கும் சிறுவன் ரொம்பவே கியூட்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் துல்லள் ரகம். தாமரையின் வரிகளில் பாடல்களும் புரியும் விதத்தில் இருக்கிறது. சக்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாண்டமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் படத்திற்கு பெரிதும் பலம் சேர்த்திருக்கிறார்கள். இவர்களைப் போலவே காஸ்ட்யூம் டிசைனர் தீபாலி மற்றும் சண்டைபயிற்சியாளர் ராஜசேகரும் தங்களது பணியை கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் வந்த ரகம் தான் என்றாலும், தனது திரைக்கதையின் மூலம் அதை வேறுபடுத்தி காட்டியிருக்கிறார் இயக்குநர். வெவ்வேறு கதைகளங்களை ஒன்றாக இணைப்பது போன்ற முயற்சியை செய்திருக்கும் இயக்குநர் அந்த இடங்களில் ரசிகர்களை சிறிது குழப்பமடைய செய்திருக்கிறார்.
படத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், திரைக்கதை அமைத்த விதம், லொக்கேஷன், சண்டைக்காட்சிகள் அமைத்திருக்கும் விதம், பாடல்கள், ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரி என ஒட்டு மொத்த படமும் ஒரு தரமான படமாக உள்ளது. |
|
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக