Wel Come To My Site............

Wel Come To My Site............
என்னுடைய கம்ப்யூட்டரில்.....

சனி, 5 மே, 2012


மெரினா

உலகின் மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்தும் சிறுவர்களைப் பற்றிய கதையே மெரினா திரைக்கதை.
கொலிவுட்டில் பசங்க திரைப்படத்தின் மூலம் சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன சந்தோசங்கள், அவர்களின் மூலமாக குடும்பங்களில் ஏற்படும் உறவுகள் போன்ற விடயங்களை திரையின் மூலமாக எடுத்துக்காட்டிய இயக்குனர் பாண்டிராஜ், மீண்டும் சிறுவர்களை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் மெரினா.
உலகின் மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்தும் சிறுவர்களைப் பற்றிய கதையே மெரினாவின் திரைக்கதை.
மெரினா கடற்கரையோடு தொடர்புள்ள காதலர்கள், பிச்சைக்காரர்கள், மனநலம் குன்றியவர்கள் என்று ஒவ்வொரு பாத்திரத்தையும் ஒன்றாக சேர்த்து இயக்குனர் பாண்டிராஜ் மெரினா திரைப்படத்தில் காட்டியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஓவியா நடித்துள்ளார். நாயகி ஓவியாவுக்கு மெரினாவின் மூலம் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
பட்டுக்கோட்டையிலிருந்து தப்பி அமரர் ஊர்தியில் சென்னைக்கு வந்து சேரும் அம்பிகாபதி (பக்கடா பாண்டி) மெரினாவில் தங்குகிறான். அங்கு அவனைப் போலவே பல சிறுவர்கள் சுண்டல், சங்கு என்று பலவற்றை விற்று வயிற்றை கழுவிக்கொண்டிருக்கிறார்கள்.
அவனுக்கு முதலில் கைலாசம் நண்பனாக, பிறகு மற்ற சிறுவர்களும் சண்டையை விடுத்து சமாதானமாகி அவனுடன் நண்பர்களாகிறார்கள்.
இவர்களை தவிர மெரினாவிலேயே வாழ்க்கை நடத்தும் பிச்சைக்கார தாத்தா, குதிரை ஓட்டுபவன், பாட்டு பாடுபவர், ஆங்கிலம் பேசும் பைத்தியக்காரன், சிறுவர்களுக்கு ஆதரவு அளிக்கும் தபால்காரர், மெரினாவிற்கு வரும் காதல் ஜோடிகளான நாதன் (சிவகார்த்திகேயன்)-சொப்பன சுந்தரி(ஓவியா) இவர்களை சுற்றி கதை நகர்கிறது.
படத்தின் நாயகன் பக்கடா பாண்டி தான். மிரள மிரள சென்னையை பார்க்கும் போதும், பிச்சைக்கார தாத்தாவிடம் உறவு கொண்டாடும் போதும், நண்பனை இழந்து வாடும் போதும் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறான்.
சிறுவர்களை வைத்து படமெடுப்பது பாண்டிராஜுக்கு கை வந்த கலையாகிவிட்டது என்று உறுதியா சொல்லலாம். எல்லா சிறுவர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
பல பாத்திரங்கள் மெரினாவில் இருந்தாலும் மருமகள் தொல்லையால் வீட்டிலிருந்து வெளியே வந்து பிச்சை எடுக்கும் தாத்தா மட்டுமே மனதில் நிற்கிறார். பைத்தியக்காரனாக வருபவர் ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும் அவர் பாத்திரத்தில் கொஞ்சம் செயற்கைத்தனமே மேலோங்கி நிற்கிறது.
மெரினாவில் குடியிருக்காவிட்டாலும் படத்தை தொய்வில்லாமல் கொண்டு போவதற்கு அங்கு வரும் காதல் ஜோடிகளான சிவகார்த்திகேயனும், ஓவியாவும் பெரிதும் உதவியிருக்கிறார்கள். இவர்களுடைய காதலை நேரம் போவது தெரியாமல் சுவையாக இயக்குனர் பாண்டிராஜ் சொல்லியிருக்கிறார்.
நாயகன் சிவகார்த்திகேயன் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இனி இவருக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் குவியும் என்று கொலிவுட்டில் தகவல் வந்துகொண்டேயிருக்கின்றன.
களவாணி திரைப்படத்திற்கு பிறகு காணாமல் போன நாயகி ஓவியா மெரினாவில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பனாக வருபவரும் நன்றாக நடித்திருக்கிறார்.
பல நடிகர்களோடு சேர்த்து இசையமைப்பாளர், திரைப்பட தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர் என்று பலரை மெரினாவில் இயக்குனர் பாண்டிராஜ் அறிமுகப்படுத்தியிருக்கிறார். " வாழ வைக்கும் சென்னை " பாடலும் நண்பன் " பாடலும் முனுமுணுக்க வைக்கின்றன.
5 டி கமெராவில் படம்பிடித்து தன் ஒளிப்பதிவால் மெரீனாவையே சுத்தமாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்க்கு பாராட்டுக்கள்.
மெரினாவை மட்டுமே வைத்துக்கொண்டு முழு படத்தையும் நகர்த்திய விதம், நகைச்சுவை ததும்பும் வசனங்கள், சிறுவர்களுக்கு கல்வியின் அவசியத்தை உணர்த்தும் கதை, ஆதரவற்ற சிறுவர்களின் வாழ்க்கை முறையை கண்முன் நிறுத்திய பாங்கு, தாத்தா, தபால்காரர், குதிரைக்காரன் இவர்களுக்கும் சிறுவர்களுக்கும் இடையேயான நட்பு, காதல் என்ற பெயரில் சமுத்திரத்தை அசுத்தம் செய்யும்(கள்ள) காதல் ஜோடிகள் பற்றி சொன்ன விதம் இவையெல்லாம் மெரினாவின் அழகை ரசிக்க வைக்கின்றன.
ஆதரவின்றி கடலோரம் வாழும் சிறார்களை பற்றிய பிரச்சினைகள் கடல் அளவு இருக்க அதை முழுவதும் இறங்கி அலசாமல் பள்ளி சுற்றுலா போல சிலவற்றை மட்டும் மேம்போக்காக சொல்லியிருப்பதால் கடற்கரை சென்றும் காலை நனைக்காமல் திரும்ப வந்தது போல ஒரு குறை.
இருப்பினும் திரைப்படம் போன்ற எந்தவொரு நினைவுகளும் இல்லாமல் இயல்பான முறையில் திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் பாண்டிராஜை எவ்வளவு பாராட்டினாலும் தவறில்லை.
நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ஓவியா, சிறுவன் அம்பிகாபதி, ஜெயப்பிரகாஷ், பாண்டியன், கௌதம் புருஷோத், செந்திகுமாரி, ஜித்தன் மோகன்.
சிறப்பு நடிகர்கள்: சீயான் விக்ரம், சினேகா, விமல், அமீர், சசிகுமார், பிரகாஷ்ராஜ்.
இசை: ஜி.கிரிஷ்
ஒளிப்பதிவு: விஜய்
தயாரிப்பு, இயக்கம்: பாண்டிராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக