Wel Come To My Site............

Wel Come To My Site............
என்னுடைய கம்ப்யூட்டரில்.....

செவ்வாய், 10 மே, 2011

விடியல்



இசையின் குருகள் ஆன குயில்கள்
இன்னிசை கச்சேரி நிகழ்த்த
ஓங்கி வளர்ந்து ஒய்யாரமாய் நிற்கும் மரங்கள்
தன் ஆயிரம் கைகளை அழகாய் வீச
பனியிடம் குளிரையும் பூவிடம் மணத்தையும்
கடனாய் வாங்கி
புயல் எனும் கோபத்தை தவிர்த்து
காற்று தென்றலாய் வீச
காலை கதிரவன் தன் கதிரை
கைகளாக விரிக்க
புற்கள் தன் மீது படர்ந்த பனித்துளிகளை
சிறு புதையல் என மறைக்க
அழகின் சிகரமாக மாறப்போகிறோம்
என கர்வம் கொண்ட மொட்டுகள்
பூவாய் மலர
வெள்ளை நரை தலையை கொண்ட ஓடைகள்
புது மெட்டுகளுடன் ஒலியை எழுப்ப
அழகின் வண்ணமாம் கருமை நிறத்தை
தனக்கே உரியதாய் கொண்ட காகம்
தன் இனிய குரலில் சங்கீதம் பாட
வட்ட கிண்ணத்தில் பதித்த முத்துக்கள் போல
மின்னும் அழகியான நிலவு
தன் காதலன் வருகைக்காக காத்திருக்க
அம்மாவின் நெற்றி பொட்டைப் போல
தன் முகத்தை சாந்தமாய் கொண்டு
தன் காதலி நிலவை சூரியன் பார்க்க
என் மகன் வந்து விட்டான் என்ற மகிழ்ச்சியில்
கீழ்வானம் அழகாய் சிவக்க
இதோ விடிகிறது விடியல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக