Wel Come To My Site............

Wel Come To My Site............
என்னுடைய கம்ப்யூட்டரில்.....

செவ்வாய், 15 மார்ச், 2011

சடங்கே ஒரு விளையாட்டுத்தானே!

நமக்குக் கல்யாணம் நடக்கிற நாளில், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கச் சொல்லும்போது, நான் உன்னைத்தான் பார்ப்பேன்' என்றேன். 'ஏன்... என் முகத்திலா அருந்ததி இருக்கிறது?' என்றாய். 'இல்லை...

அருந்ததியே உன் முகமாக இருக்கிறது!' என்றேன். நீ சிரித்துவிட்டு, 'அப்ப நான் மட்டும் வானத்தைப் பார்க்கணுமா?' என்றாய்.

வேண்டாம்... வேண்டாம். சீர் வரிசையில் கண்ணாடி இருக்கும் இல்லையா, அதை எடுத்துக் காட்டுகிறேன். அதில் உன் முகத்தையே நீயும் பார்த்துக்கொள்' என்றேன்.

ம்ம்ம்... கூடியிருப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா?' என்றாய். 'சிரிக்கட்டுமே... அதைவிடச் சிறந்த வாழ்த்தொலி எது!' என்றேன். 'சடங்கில் இப்படியெல்லாமா விளையாடுவது?' என்றாய்.

சடங்கே ஒரு விளையாட்டுத்தானே!' என்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக